Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தண்ணீர்ப் பந்தல் வைத்த வரலாறு சோழனை மடுவில் வீழ்த்திய வரலாறு
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 8. திருவிளையாடற்புராணம் சுருக்கம்
இரசவாதம் செய்த வரலாறு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2018
01:08

மதுரைக்கு அருகில் உள்ள திருப்புவனத்தில் பொன்னனையாள் என்னும் கணிகை இருந்தாள்.  திருப்புவன நாதரின் கோவில் பணியாற்றிய அவள் அழகு மிகுந்தவள். சிறந்த சிவபக்தி கொண்டவள். அவளது பக்திப் பெருக்கை உலகத்தவருக்கு உணர்த்தத் திருஉளம் கொண்டார் சிவபெருமான்.

பொன்னனையாள் தினந்தோறும் தம் வீட்டில் சிவனடியார் பலருக்கு திருவமுது படைத்து வந்தாள். ஒருநாள் சிவபெருமான் சித்தர் வேடம் தாங்கி அவளது வீட்டிற்கு வந்தார். ஆனால் மற்ற அடியார்களுடன் திருவமுது செய்யாது திண்ணையில் தனியே அமர்ந்திருந்தார். அதுகண்ட வேலைக்காரி சாப்பிட அழைத்தாள். அவளிடம் “உங்கள் தலைவியை இங்கே அனுப்பு” என்றார் சித்தமூர்த்தி. தலைவியிடம் தெரிவித்தாள் பனிப்பெண். விரைந்து வந்தாள் பொன்னனையாள். ‘உன் உடல் ஏன் மெலிந்துள்ளது? என்றார். அதற்குப் பொன்னனையாள் பெருமானே சிவபெருமானின் திருவுருவத்தைப் பொன்னால் முடிக்க ஆசை! என்னிடம் அவ்வளவுப் பொன் இல்லை. இதுவே என்மனக்குறை. இம்மனக்குறையே என் உடல் மெலிவிற்குக் காரணம்!” என்றாள். உடனே சித்தமூர்த்தி அவளது வீட்டில் உள்ள பித்தளை, ஈய பாத்திரங்களைக் கொண்டு வரச்சொல்லி அவற்றின் மீது திருநீற்றினைத்தூவினார்” இன்றிரவு இவற்றை நெருப்பில் இட்டால் எல்லாமே பொன்னாகி விடும்” என்று கூறி மறைந்தார்.

உடனே பொன்னனையாள் வந்தவர் மதுரையில் கோவில் கொண்டுள்ள சோமசுந்தரக் கடவுளே என்பதை அறிந்து ஆனந்தப் பரவசத்துடன் மெய்மறந்து நின்றாள். அன்றிரவே ஈய, பித்தளைப் பாத்திரங்களை நெருப்பில் இட்டு தங்கம் ஆக்கி இறைவனின் திருஉருவத்தைப் பொன்னால் சமைத்தாள். பொன்னனையாளின் மனக்குறை இறைவனின் ரசவாதத் திருவிளையாட்டால் நீங்கியது.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 8. திருவிளையாடற்புராணம் சுருக்கம் »
temple news
பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணம்அறுபத்து நான்கு திருவிளையாடல்கள் சுருக்கம்வேதியா வேதா கீதா ... மேலும்
 
temple news
தேவர்களின் அரசன் தேவேந்திரன். இவன் "விருத்திகாசுரன் என்ற கொடிய அரக்கனைக் கொன்றான் எனவே "பிரம்மஹத்தி ... மேலும்
 
temple news

வெள்ளை யானை ஜூலை 26,2018

காசி நகரில் கங்கைக் கரையில் சிவலிங்கத்திற்குப் பூஜை செய்து வந்தார் துருவாச முனிவர். அவரது பக்திக்கு ... மேலும்
 
temple news

கடம்பவனம் ஜூலை 26,2018

மதுரை தோன்றுவதற்கு முன், பாண்டிய மன்னன் "மணவூர் என்னும் ஊரைத் தலைநகரமாக் கொண்டு ஆட்சிபுரிந்து வந்தான். ... மேலும்
 
temple news
பாண்டிய அரசன் மலயத்துவசன். இவன் சோழ மன்னனான சூரசேனின் மகள் காஞ்சனமாலையை மணந்து கொண்டான். ஆண்டுகள் பல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar