புதன் அக்.3 வரையும், குரு அக்.4 வரையும் நற்பலனைத் தருவார்கள். அதோடு சுக்கிரனாலும் நன்மை மேலோங்கும். முக்கிய கிரகங்கள் சாதகமாக காணப்படுவதால் எடுத்த செயலை வெற்றிகரமாக முடிக்கலாம். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பணப்புழக்கம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும். அக்.4ல் குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது.
குடும்பத்தில் சுக்கிரனால் பெரியோர் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். மனதில் பக்தி உயர்வு மேம்படும். குரு, புதனால் அக்.4 வரை குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை உண்டாகும். புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அக்.2,3ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். அக்.3க்கு பிறகு புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் கணவன்-, மனைவி இடையே வாக்குவாதம், கருத்துவேறுபாடு உருவாகலாம். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும்.
பணியாளர்களுக்கு புதன் சாதகமான நிலையில் இருப்பதால் நற்பலன் உண்டாகும். வேலைப்பளு படிப்படியாக குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சூரியனால் சக ஊழியர்களின் மத்தியில் அவ்வப்போது சிறு பிரச்னை ஏற்பட்டாலும் பாதிப்பிருக்காது. தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம்.
அவர்கள் தங்கள் கோரிக்கைகளை அக்.3 க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். செப். 25,26ல் அதிர்ஷ்டவசமாக வருமானம் கிடைக்கும். உங்கள் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். அக்.3க்கு பிறகு வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை காணலாம். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. செப்.29,30, அக்.1,4,5ல் சந்திரனால் பண விரயம் ஏற்படலாம். உங்கள் முயற்சியில் தடைகள் குறுக்கிடலாம். அக்.12,13,14ல் சேமிக்கும் விதத்தில் ஆதாயம் வர வாய்ப்புண்டு. அக்.3க்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர் பயணம் ஏற்படலாம். இருப்பினும் குருவின் 9-ம் இடத்துப் பார்வையால் நன்மை கிடைக்கும்.
கலைஞர்கள் தொழிலில் சிறப்படைவர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்கள் உதவிகரமாக செயல்படுவர். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல தொண்டு செய்பவர்கள் சிறப்பான பலனை காண்பர். அக்.10,11ல் மனக்குழப்பம் ஏற்படலாம். சனிபகவானால் சிலர் அலைச்சலுக்கு ஆளாகலாம். வெளியூரில் தங்கவும் நேரிடலாம். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் கிடைக்கும். கல்வி வளம் பெருகும். புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி உண்டாகும். மாத பிற்பகுதியில் அக்.3க்கு பிறகு சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.
விவசாயிகள் முன்னேற்றம் அடைவர். கால்நடை வளர்ப்பிலும் போதிய வருவாய் பெறலாம். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம் புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். சொத்து வாங்கும் முயற்சியில் இழுபறி உண்டாகும். ராகுவால் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம்.
பெண்கள் குடும்பத்தினர் மத்தியில் நற்பெயர் பெறுவர். கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வர வாய்ப்புண்டு. சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்வீர்கள். தோழிகள் உதவிகரமாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி பெறுவர். புதிய பதவியும் சிலரைத் தேடி வரும். அக்.6,7ல் புத்தாடை, அணிகலன் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனப்பொருள் வரப் பெறலாம். செப்.17,18,19, அக்.15,16ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அக்.3க்கு பிறகு பொறுமையுடன் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.