பதிவு செய்த நாள்
11
ஏப்
2019
04:04
விதியையும் மதியால் வெல்லும் விருச்சிக ராசி அன்பர்களே!
இந்த மாதம் சூரியன் சாதகமான இடத்துக்கு வருவதால் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும். புதன் ஏப்.26 முதல் மே12 வரை நற்பலனை கொடுப்பார். 2-ம் இடத்தில் இருக்கும் குரு, 4-ம் இடத்தில் இருக்கும் சுக்கிரனால் மாதம் முழுவதும் சுகமான வாழ்வு அமையும். மனதில் துணிச்சல் பிறக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கி மகிழலாம். சூரியனின் பலத்தால் பகைவரை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். சமூக மதிப்பு சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் உறவினர்களிடம் சுமுக நிலை ஏற்படும். புதிய உறவினரால் உதவி கிடைக்கும். க்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். ஏப்.16க்கு பிறகு பெரியோர் ஆலோசனை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். லாபம் அதிகரிக்கும். பக்தி எண்ணம் மேம்படும். ஏப்.26 வரை புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் சில பிரச்னை வரலாம். கணவன், மனைவி இடையே கருத்துவேறுபாடு உருவாக வாய்ப்புண்டு. ஒருவருக்கொருவர் விட்டுக்
கொடுத்து போவது நல்லது. அதன் பிறகு முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். ஏப்.17,18ல் உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் ஏப்.29,30ல் உறவினர் வகையில் கருத்துவேறுபாடு ஏற்படலாம் என்பதால் ஒதுங்கி இருக்கவும். ஏப்.22,23ல் பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
பணியாளர்களுக்கு சூரியனால் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும் இருப்பினும் புதன் ஏப்.26 வரை சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். முக்கிய பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைக்க வேண்டாம். அதன்பின் கோரிக்கைகள் நிறைவேறும். வேலை விஷயமாக குடும்பத்தை பிரிந்தவர்கள் ஒன்று சேர வாய்ப்புண்டு. ஏப்.15,16, மே12,13,14ல் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
வியாபாரிகளுக்கு தொழிலில் லாபத்துக்கு குறை இருக்காது. தொழிலில் வரும் தடங்கல்களை முறியடித்து முன்னேற்றம் காண்பீர்கள். ஆனால் அதற்காக எதிலும் புதிதாக முதலீடு செய்ய வேண்டாம். உங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேற்றம் காணலாம். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது.
அரசு வகையில் சிலர் பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். எனவே வரவு, செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் ஏப்.26க்கு பிறகு வீடு திரும்புவர். ஏப்.19,20,21,24,25ல் சந்திரனால் தடைகள் வரலாம். மே 4,5ல் எதிர்பாராத வகையில் பணவரவு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். பணவிஷயத்தில் குறை இருக்காது. ஏப்.16க்கு பிறகு சக கலைஞர்கள் ஆதரவுடன் இருப்பர். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சுமாரான பலனையே காணமுடியும்.
மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். பின் தங்கிய நிலையில் இருந்து ஏப்.26க்கு பிறகு மீண்டும் முன்னேற்ற பாதையில் வெற்றி நடை போடுவர். போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகள் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கப் பெறுவர். குறிப்பாக பழ வகைகள், மஞ்சள், பயறு வகைகள் மூலம் அதிக லாபம் கிடைக்கும். கால்நடைகள் மூலம் சீரான வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க பொறுத்திருக்க வேண்டும். பெண்கள் தோழிகளுடன் அனுசரணையாக இருப்பர். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள்.அண்டை வீட்டாரின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
ஏப்.26க்கு பிறகு தடைபட்ட சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும். சிலர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். ஏப்.26,27,28ல் புத்தாடை, நகைகள் வாங்கலாம். மே6,7ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
* நல்ல நாள்: ஏப்.15,16,17,18,22,23,26,27,28,மே4,5,6,7,12,13,14
* கவன நாள்: மே 8,9 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 3,9
* நிறம்: மஞ்சள், சிவப்பு
* பரிகாரம்:
* சனிக்கிழமையில் சனீஸ்வரர் அர்ச்சனை
* தேய்பிறை அஷ்டமியில் பைரவர் தரிசனம்
* திங்களன்று மாலையில் சிவாலய வழிபாடு