பதிவு செய்த நாள்
14
மே
2019
11:05
உங்கள் ராசிக்கு 3ல் உள்ள சனி, கேது மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார்கள். புதன் மே29வரை 8-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தருவார். ஜூன்4 முதல் சுக்கிரன் ரிஷப ராசிக்கு வந்து நற்பலன் தருவார். குரு மே18ல் அதிசார காலம் முடிந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார். இது சாதகமான இடம். அப்போது அவரால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
குடும்பத்தில் புதனால் நன்மை காண்பீர்கள். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும்.
மே28க்கு பிறகு மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் இருக்கவும், விட்டுக் கொடுத்து போகவும். ஜூன்3க்கு பிறகு சுக்கிரனால் வசதி வாய்ப்பு பெருகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். பொருளாதார வளம் கூடும். மே16,17,18, ஜூன்13,14ல் சகோதரிகள் உதவிகரமாக செயல்படுவர்.
பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்புடன் இருப்பர். கோரிக்கைகள் நிறைவேறும். சக பெண் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆனால் அரசு வேலையில் இருப்பவர்கள் அதிக அக்கறையுடன் இருக்கவும். ஜூன்7,8ல் பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம் மே28க்கு பிறகு வேலைப்பளு இருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. ஆனால் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.
வியாபாரத்தில் லாபம் குறையாது. ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும். மே15,19,20, ஜூன்11,12,15ல் சந்திரனால் தடைகள் வரலாம். மே29,30ல் எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்.
மே28க்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம். எனவே மற்றவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து போகவும்.
கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் ஜூன்3க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள், பொதுநலசேவகர்கள் சீரான பலனை காண்பர். விடாமுயற்சியால் சிலருக்கு பதவி கிடைக்கும். மே26,27,28ல் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் சீரான நிலையில் இருப்பர். போட்டிகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புண்டு. மே29க்கு பிறகு சிலர் கெட்ட சகவாசத்திற்கு ஆளாகலாம். கவனம் தேவை. இருப்பினும் குருவால் எந்த பிரச்னையையும் முறியடித்து வெற்றிக்கு வழி காணலாம். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும்.
விவசாயிகள் மஞ்சள், கேழ்வரகு, சோளம் பயறு வகைகள் மூலம் நல்ல வருமானம் காணலாம். புதிய சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும். வழக்கு, விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். மே28க்கு பிறகு புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.
பெண்களுக்கு கணவரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்த குடும்பத்தினர் உங்களின் அன்பை உணர்ந்து அனுகூலமாக நடப்பர். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு லாபத்துக்கு குறைவிருக்காது.
மே21,22,23ல் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் வரப் பெறலாம்.
மே31, ஜூன்1 சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழாவுக்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.
* நல்ல நாள்: மே 16,17,18,21,22,23,29,30,31 ஜூன் 7,8,9,10,13,14
* கவன நாள்: ஜூன் 2,3,4 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,7
* நிறம்: மஞ்சள் சிவப்பு
பரிகாரம்:
● செவ்வாயன்று முருகனுக்கு பால் அபிஷேகம்
● சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் வழிபாடு
● பிரதோஷத்தன்று நந்தீஸ்வரருக்கு நெய் தீபம்