மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) எதிர்பாராத பணவரவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2019 01:08
புதன் ஆக. 21 முதல் செப்.7 வரை நற்பலனை கொடுப்பார். அதோடு குரு, ராகு, சுக்கிரன் சாதகமான நிலையில் இருந்து மாதம் முழுவதும் நன்மை கொடுப்பர். ஆடம்பர வசதிகள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர்.
ராகு முயற்சிகளில் வெற்றியை தருவார். அவரால் பகைவர் சதியை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள். உங்களின் ஆற்றல் மேம்படும். குருபகவான் தற்போது உங்கள் ராசிக்கு 11ம் இடமான விருச்சிக ராசியில் இருக்கிறார். இது மிக சிறப்பான இடமாகும். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வார். மேலும் அவரின் 7 மற்றும் 9ம் இடத்து பார்வைகள் சிறப்பாக உள்ளன. அதன் மூலமும் நன்மைகள் பெறலாம்.
குடும்பத்தில் சுக்கிரனால் நன்மை கிடைக்கும். பொருளாதார வளம் கூடும். புதனால் இருந்த அலைச்சல், மனவேதனை, மனைவி வகையில் இருந்த மனக்கசப்பு, அண்டை வீட்டார் பிரச்னை முதலியன ஆக. 21க்கு பிறகு மறையும். அதன் பிறகு அவரால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் சேரும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். செப்.5,6ல் உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களால் நன்மை ஏற்படும். ஆக.21,22, செப்.17ல் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். செப்.10,11ல் விருந்து, விழா என சென்று வருவீர்கள். சகோதரவழியில் பண உதவி கிடைக்கும். செப். 7க்கு பிறகு மனதில் வேதனை வரலாம். சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் இருக்கவும். விட்டுக் கொடுத்து போகவும்.
பணியாளர்களில் அரசு வேலை பார்ப்பவர்கள் அக்கறையுடன் பணியாற்றவும். ஆக.21க்கு பிறகு தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் திருப்திகரமான நிலையில் இருப்பர். புதிய பதவி தேடி வரும். வேலைப்பளு குறையும். சக பெண் ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். செப். 3,4ல் அதிர்ஷ்டவசமாக நன்மை கிடைக்கும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். செப்.7க்கு பிறகு தரம் தாழ்ந்தவர்களின் சேர்க்கையால் அவப்பெயர் ஏற்படலாம் கவனம்.
வியாபாரிகள் தேவைக்கு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். போட்டியாளர்கள் வகையில் தொந்தரவு குறுக்கிடலாம்.அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு, செலவு கணக்கை சரியாக வைக்கவும். குருவால் பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சி பெறும். செப்.7,8,9,12,13,14ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஆக.23,27ல் எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.
கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பார்க்காமல் உழைக்க வேண்டியதிருக்கும். ஆக.23,24,25ல் மனக்குழப்பம் ஏற்படலாம். செப்.7க்கு பிறகு மறைமுகப் போட்டிகள் அதிகம் இருக்கும்.
மாணவர்கள் ஆக.21 முதல் செப்.7 வரை புதன் சாதகமாக இருப்பதால் நல்ல முன்னேற்றம் காண்பர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவர். செப்.7க்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். சிலர் தீயவர்களோடு சேர்ந்து அவப்பெயர் எடுக்க வாய்ப்புண்டு கவனம். இருப்பினும் குரு சாதகமாக இருப்பதால் படிப்பு பாதிக்காது.
விவசாயிகள் கடின உழைப்பால் வருமானம் கிடைக்க பெறுவர். மானாவாரி பயிர்கள் மூலம் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பின் மூலம் எதிர்பார்த்த லாபம் வரும். புதிய சொத்து வாங்க சிலகாலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு, விவகாரத்தில் சுமாரான முடிவு ஏற்படும்.
பெண்கள் அக்கம்பக்கத்தினருடன் அனுசரணையாக நடந்து கொள்வர். குருவின் பார்வையால் குடும்ப வாழ்வில் குதூகலம் உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறும். ஆக. 21க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். ஆக.18,19,20, செப்.15,16ல்பொன், பொருள் கிடைக்கப் பெறுவர்.
* நல்ல நாள்: ஆக.18,19,20, 26,27,28,29, செப்.3,4,5,6, 10,11,15,16 * கவன நாள்: ஆக.30,31 சந்திராஷ்டமம் * அதிர்ஷ்ட எண்: 2,8 * நிறம்: மஞ்சள், வெள்ளை
பரிகாரம்: ● சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகர் தரிசனம் ● சனிக்கிழமையன்று ஆஞ்சநேயருக்கு விளக்கு ● பவுர்ணமியன்று அம்மன் கோயில் வழிபாடு
மேலும்
பங்குனி ராசி பலன் (14.3.2024 முதல் 13.4.2024 வரை) »