உங்கள் ராசிநாதன் புதன் ஐந்தாம் இடத்தில் நீசம்பெற்ற சூரியன், உச்சம் பெற்ற சனியுடன் உள்ளார். இந்த மாதம் அனுகூல பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், செவ்வாய், ராகு செயல்படுகின்றனர். கடமையில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் திறமையை பயன்படுத்த பலரும் விரும்புவர். சூழ்நிலையின் நன்மை, தீமை உணர்ந்து செயல்படுவது நல்லது. சமூகத்தின் பார்வையில் கவுரவம் மிக்கவராக கருதப்படுவீர்கள். வீடு, வாகனத்தில் திருப்தியான சூழ்நிலை உண்டு. புத்திரரின் செயல்பாடு கண்டு மகிழ்வீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். எதிரி தொல்லை நீங்கும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து உறவினர்களின் மதிப்பைப் பெறுவர். நண்பர்களின் ஆலோசனையும் பணஉதவியும் தக்க சமயத்தில் கிடைக்கும். தொழிலதிபர்கள் உற்பத்தியைப் பெருக்க புதிய தொழில்நுட்பங்களை மேற்கொள்வர். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற கவர்ச்சியான திட்டங்களை செயல் படுத்துவர். பணியாளர்கள் பொறுப்புடன் பணிசெய்து நற்பெயரை காத்திடுவர். சக பணியாளர் களிடம் சுமூகமான நட்பு இருக்கும். குடும்ப பெண்கள் புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் கணவரால் மதிக்கப் படுவர். தாய்வழி சீர்முறைகளைக் கேட்டுப் பெறுவதில் நிதான நடைமுறையைப் பின்பற்றுவது அவசியம். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணிகளை நிறைவேற்றி மன நிம்மதி காண்பர். சலுகை ஓரளவே கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் மூலதனத்தை அதிகப்படுத்தி வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வர். அரசியல்வாதிகள் அரசாங்க அதிகாரிகளிடம் மென்மையான அணுகுமுறையைப் பின்பற்றுவது நல்லது. விவசாயிகளுக்கு அளவான மகசூல், கால்நடை வளர்ப்பில் சீரான லாபம் கிடைக்கும். மாணவர்கள் அக்கறையுடன் படித்து சிறந்ததேர்ச்சிபெறுவர்.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் தொழிலில் லாபம் பன்மடங்கு உயரும். உஷார் நாள்: 22.10.10 அதிகாலை 5.34 -24.10.12 காலை 9.57 வெற்றி நாள்: நவம்பர் 8, 9 நிறம்: சிவப்பு, நீலம்,எண்: 1, 8
மேலும்
வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை) »