பதிவு செய்த நாள்
09
அக்
2012
03:10
பொறுமைக்கு பெருமை சேர்க்கும் ரிஷபராசி அன்பர்களே!
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து அனுகூல பலன்களைத் தருகிறார். சூரியன், புதன், சனி ராசிக்கு ஆறாம் இடத்தில் அமர்ந்து தங்கள் பங்கிற்கு அளப்பரிய நன்மைகளை வழங்குவர். குடும்ப நிகழ்வுகள் அனைத்தும் சுபமாக அமையும். மனதில் சந்தோஷம் நிலைத்திருக்கும்.வீடு, வாகனத்தில் வளர்ச்சி உண்டாகும். புதிய சொத்து சேர்க்கையும் உண்டு. புத்திரர் படிப்பில் நல்ல முன்னேற்றம் பெறுவர். கடன் தொந்தரவு குறையும். உறவினர், நண்பர்களிடத்தில் மதிப்பு, மரியாதை கூடும். தம்பதியர் அன்பு, பாசத்துடன் நடந்து குடும்ப பெருமையைக் காத்திடுவர். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் மூலம் தாராள பணவரவு காண்பர். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் ஆதரவால் விற்பனையை அதிகரிப்பர். பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு பணியிலக்கை எளிதில் நிறைவேற்றுவர். குடும்ப பெண்கள் அன்றாட பணிகளை சுணக்கமின்றி நிறைவேற்றுவர். வீட்டுச் செலவுக்கான பணம் தக்க சமயத்தில் கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு அகலும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அவரவர் தகுதிக்கேற்ப கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் திறமையுடன் செயல்பட்டு பணிஇலக்கை விரைந்து நிறைவேற்றுவர். பதவி உயர்வு பெற வாய்ப்புண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வர். உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள வருமானம் கிடைக்கும். அரசியல்வாதிகள் புதிய பதவி, பொறுப்பு கிடைக்கப் பெறுவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறக்கும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்கி பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பர்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் வீட்டில் சுபநிகழ்ச்சி நடந்தேறும்.
உஷார் நாள்: 20.10.12 அதிகாலை 2.37 - 22.10.12 அதிகாலை 5.34
வெற்றி நாள்: நவம்பர் 5, 6, 7
நிறம்: பச்சை, ஆரஞ்ச், எண்: 5, 7