சவுபாக்கிய கவுரி விரதம்; அம்மனை வழிபட நிறைவான வாழ்வு அமையும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31மார் 2025 10:03
பங்குனி மாத வளர்பிறை திருதியை சவுபாக்கிய கவுரி விரதம் என்று கொண்டாடப்படுகிறது. இன்று (31ம்தேதி) இந்த சிறப்பான தினம் வருகிறது. அம்பாளை கொண்டாடுகின்ற இந்த விரதத்தை மிக எளிமையான பூஜையின் மூலம் கொண்டாடலாம். சிலர் ஒரு மாத காலம் கொண்டாடுவார்கள். இந்த விரதத்தால், வீட்டில் தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் எல்லாம் தடை நீங்கி நடக்கும். வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் பெருமாள் கோவிலில் தாயாருக்கும், சிவாலயத்தில் விளக்கு போட்டு, தாயாருக்கு தாமரை மலர் சாத்தி அர்ச்சனை செய்து வரலாம். இன்று கவுரி தேவியை வழிபட்டு பதினாறு வகை பேறுகளையும் பெறுவோம்..!