Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருச்சிகம்: (விசாகம் 4, அனுஷம், ... மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) - பதவி உயர்வு கிடைக்கும் மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) - ஆடம்பர வசதி பெருகும்
எழுத்தின் அளவு:
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) - ஆடம்பர வசதி பெருகும்

பதிவு செய்த நாள்

17 ஆக
2017
10:08

குருவை ஆட்சி கிரகமாக கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும்.
சுக்கிரன் ஆக. 21-க்கு பிறகு சாதகமான இடத்திற்கு வருவதால் நன்மை உண்டாகும். ஆனால் அவர் செப்.15-ல் சாதகமற்ற  நிலைக்கு செல்வதால் நன்மை குறையத் தொடங்கும்.

குரு பகவான் தற்போது உங்கள் ராசிக்கு 10-ம் இடமான கன்னி ராசியில் இருந்து பல்வேறு பிரச்னையைத் தந்து கொண்டிருந்தார். அவரால் பொருள் இழப்பு ஏற்பட்டிருக்கலாம். சிலர் பதவி இழக்கும் நிலைக்கும் ஆளாகி இருக்கலாம்.  இந்நிலையில் செப்.2-ல் குரு பகவான் 11-ம் இடமான துலாம் ராசிக்கு மாறுவது சிறப்பான அம்சமாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச் செய்வார். மேலும் அவரின் 7 மற்றும் 9-ம் இடத்து பார்வை மூலம் நன்மை அதிகரிக்கும்.

பொருளாதார வளம் சிறப்பாக இருந்தாலும் அவ்வப்போது தடைகளை சந்திக்க நேரிடும். சூரியனால் சமூக மதிப்பு எதிர்பார்த்தபடி இருக்காது. புதனால் செப். 2 க்கு பிறகு சிலரது பொல்லாப்பை சந்திக்க வேண்டியதிருக்கும். எனவே வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். அனைவரிடமும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

குடும்பத்தேவை குறையின்றி பூர்த்தியாகும். ஆக.21க்கு பிறகு ஆடம்பர வசதிகள் பெருகி குடும்பத்தில் மகிழ்ச்சி குடியிருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குறிப்பாக ஆக.31, செப்.1,2- ல் பெண்களால் நன்மை கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஆக. 26,27,28-ல்  உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் செப். 7,8,9-ல்  அவர்கள் வகையில் பிரச்னை குறுக்கிடலாம்.  சற்று ஒதுங்கி இருப்பது நல்லது. செப்.2க்கு பிறகு  கணவன்-, மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்காது.  

சிறு பிரச்னைகள் உருவாகி மறையும். செவ்வாயால் உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.

தொழில், வியாபாரத்தில்  மாதத்தின் தொடக்கத்தில் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில்  வளர்ச்சி அடையும். ஆக. 29,30, செப். 3,4-ல்  பண விரயம் ஆகலாம்.ஆக.17, செப்.12,13-ல் மறைமுக போட்டியாளர்களை வெல்லும் ஆற்றல் பிறக்கும். புதனால் செப்.2- க்கு பிறகும் சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே எச்சரிக்கையுடன் பழகவும்.

பணியாளர்கள் புதனின் பலத்தால் சிறப்பான நிலையில் இருப்பர். பதவி உயர்வு கிடைக்கும்.  கோரிக்கைகள்  எளிதில் நிறைவேறும். செப்.2- க்கு பிறகு வேலையில் அதிக பளுவும் அலைச்சலும் இருக்கும். அதே சமயம் பிரச்னைகள் அனைத்தும் குருவால் இருக்கும் இடம் தெரியாமல் பறந்தோடும். ஆக.24,25ல்  எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.

கலைஞர்களுக்கு - பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் ஆக. 21க்கு பிறகு மறையும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்காலத்தில் அதற்கான பலன் கிடைக்கும்.

மாணவர்கள்-  புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். செப்.2- க்கு பிறகு குரு பக்கபலமாக இருப்பதால் நல்ல வளர்ச்சி உண்டாகும். விவசாயிகள்- கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனாலும் வருமானத்திற்கு குறைவிருக்காது.  வழக்கு விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க நேரிடும்.

பெண்களுக்கு  குடும்பத்தாரிடம் நற்பெயர் கிடைக்கும்.வேலைக்கு செல்லும் பெண்கள் நல்ல வளர்ச்சி பெறுவர். வேலையில் திறமை பளிச்சிடும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தை காணலாம். செப். 2-க்கு பிறகு கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.  ஆக.18,19,செப்.14,15ல் சிறந்த பலனை எதிர்பார்க்கலாம். விருந்து. விழா என சென்று வருவீர்கள். செப். 5,6-ல் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.

நல்ல நாள்: ஆக.17,18,19,24,25,26,27,28,29,31, செப். 1,2,5,6,12,13,14,15
கவன நாள்: ஆக. 20,21, செப். 16- ல் சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்:  5,8
நிறம்: பச்சை, வெள்ளை

பரிகாரம்
* சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்சனை
* செவ்வாயன்று முருகனுக்கு நெய்விளக்கு
* பிரதோஷத்தன்று நந்தீஸ்வரர் வழிபாடு.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar