Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1) - ... கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) - சொத்து சேரும் காலம் கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ...
முதல் பக்கம் » மார்கழி ராசி பலன் (16.12.2025 முதல் 14.1.2025 வரை)
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) - பதவி உயர்வு கிடைக்கும்
எழுத்தின் அளவு:
மகரம்: (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2) - பதவி உயர்வு கிடைக்கும்

பதிவு செய்த நாள்

17 ஆக
2017
10:08

சனி பகவானை ஆட்சி நாயகனாக கொண்ட மகர ராசி அன்பர்களே!

சனிபகவானால் மாதம் முழுவதும் நன்மை உண்டாகும். புதன் செப்.2-க்கு பிறகும்,
சுக்கிரன் செப்.14-க்கு பிறகும் நற்பலன் அளிக்க காத்திருக்கின்றனர். குருபகவான் 9-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருக்கிறார். குறிப்பாக முயற்சியில் வெற்றிகளை தந்திருப்பார். அவரால் மனதில் உற்சாகம் பிறந்திருக்கும். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்பட்டிருக்கும். இந்நிலையில் குருபகவான் செப்.2-ல் 10-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. பொதுவாக 10-ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்று இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. அதன் மூலம் இடையூறை முறியடித்து முன்னேற்றம் காணலாம்.

குடும்பத்தில் செவ்வாயால் ஏற்பட்ட அலைச்சல், மனவேதனை,  அண்டை வீட்டார் பிரச்னை முதலியன ஆக.28-க்கு பிறகு மறையும். செப். 2-க்கு பிறகு  புதனால் குதூகலம் அதிகரிக்கும்.
புதுமணத் தம்பதியர் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். பிள்ளைகளின் செயல்பாடு பெருமையளிக்கும்.  ஆக.29, 30-ல் உறவினர் வருகையால் நன்மை ஏற்படும். செப். 10, 11-ல் அவர்களால் பிரச்னையை சந்திக்கலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். செப். 3,4-ல்  விருந்து விழா என சென்று வருவீர்கள். பெண்களால் நன்மை கிடைக்கும். செப்.14-க்கு பிறகு ஆடம்பர வசதி பெருகும்.

உடல் நலனில் கவனம் தேவை. ஆக. 28-க்கு பிறகு உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதை வரலாம். தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பகைவர்கள் வகையில் அவ்வப்போது தொந்தரவு ஏற்படலாம். அரசு வகையில் பிரச்னையை சந்திக்கலாம். எனவே வரவு-,செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். குருவின்  பார்வையால் வியாபாரத்தில்  முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். ஆக.31, செப்.1,2,5, 6-ல் சந்திரனால் தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். ஆக. 18,19, செப்.14,
15- ல் எதிர்பாராத பணவரவு இருக்கும்.

பணியாளர்கள் திருப்திகரமான நிலையில் இருப்பர். அரசு வேலையில் இருப்பவர்
களுக்கு பணியில் சற்று கவனம் தேவை. செப். 2-க்கு பிறகு தனியார் துறையில் வேலை
பார்ப்பவர்களுக்கு புதிய பதவி தேடி வரும். சக ஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர்.  
அதிகாரிகளின் வழிகாட்டுதலால்  வேலைப்பளு குறையும். ஆக. 26,27,28-ல் சிறப்பான பலனைக் காணலாம். பணியிடத்தில் உங்களின் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.

கலைஞர்களுக்கு  முயற்சியில் இருந்த தடையும் மனதில் ஏற்பட்ட சோர்வும் ஆக. 21-க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு பெண்கள் வகையில் தொல்லை குறுக்கிடலாம். செப்.14- க்கு பிறகு அதே பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும்.

மாணவர்கள்- மாத முற்பகுதியில் குரு சாதகமாக இருப்பதாலும், மாத பிற்பகுதியில் புதன் சாதகமாக இருப்பதாலும் நல்ல முன்னேற்றம் காணலாம்.    போட்டிகளில் வெற்றியும் கிடைக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்க பெறுவர்.

விவசாயிகள் மானாவாரி பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்கப் பெறுவர். கால்நடை வளர்ப்பின் மூலம் அதிக வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில காலம் பொறுத்திருக்க வேண்டும். வழக்கு விவகாரத்தில் சுமாரான முடிவு கிடைக்கும்.

பெண்களுக்கு பிள்ளையால் பெருமை உண்டாகும்.  அக்கம்பக்கத்தினர் அனுசரணையாக நடந்து கொள்வர். செப்.2-க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன் பெறுவர். சிலருக்கு புதிய பதவி தேடி வரும். செப். 7,8,9-ல் புத்தாடை, ஆபரணம் கிடைக்கப் பெறுவர். பெற்றோர் வீட்டில் இருந்து சீதனம் கிடைக்கப் பெறலாம். ஆக.20,21, செப்.16-ல்  சகோதரர் வழியில் உதவி கிடைக்கும்.

நல்ல நாள்: ஆக.18, 19, 20, 21, 26, 27, 28, 29, 30,
செப்.3, 4, 7, 8, 9, 14, 15, 16
கவன நாள்: ஆக. 22, 23 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்:  4,6
நிறம்: மஞ்சள், கருப்பு

பரிகாரம்
* வெள்ளிக்கிழமையில் நாகதேவதை வழிபாடு
* செவ்வாயன்று முருகனுக்கு நெய் விளக்கு
* சனிக்கிழமை பெருமாளுக்கு துளசி அர்ச்சனை.

 
மேலும் மார்கழி ராசி பலன் (16.12.2025 முதல் 14.1.2025 வரை) »
temple news
மேஷம்: அசுவினி..: உழைப்பையும், நேர்மையையும் முதலீடாக கொண்டு எடுத்த வேலையை முடிக்கும் உங்களுக்கு மார்கழி ... மேலும்
 
temple news
ரிஷபம்: கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்..: நிதானமாக செயல்பட்டு வரும் உங்களுக்கு, மார்கழி திட்டமிட்டு செயல்பட ... மேலும்
 
temple news
மிதுனம்: மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்..: எடுத்த வேலைகளை வேகத்துடனும் விவேகத்துடனும் நடத்தி வெற்றி பெறும் ... மேலும்
 
temple news
கடகம் : புனர்பூசம் 4 ம் பாதம்..: தெளிவான சிந்தனையும், பிறருக்கு வழிகாட்டும் ஆற்றலும் கொண்ட உங்களுக்கு, ... மேலும்
 
temple news
சிம்மம்: மகம்..: எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் அதையெல்லாம் சமாளித்து வெற்றி அடையக்கூடிய சக்தி கொண்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar