துலாம் : ஆங்கில புத்தாண்டுப் பலன்கள் 2026
பதிவு செய்த நாள்
27
டிச 2025 03:12
சித்திரை: நல்ல நேரம் வந்தாச்சு தைரிய வீரிய காரகனான செவ்வாயின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்தாலும், 1,2 ம் பாதங்களான கன்னியில் பிறந்தவர்களுக்கு புதன் ராசிநாதனாகவும், 3,4 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும் உள்ளனர். பிறக்கும் 2026 ஆண்டு, 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு யோகமாக இருக்கும். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். நல்ல காலம் பிறக்காதா என காத்திருந்தவர்களுக்கு நினைத்தது நடந்தேறும். முயற்சிகள் வெற்றியாகும். வாழ்க்கை வளமாகும். தொழில், வியாபாரம் முன்னேற்றம் அடையும். 3,4 ம் பாதத்தினருக்கு பாக்ய குரு, லாப கேது, சத்ரு ஜெய ஸ்தான சனி என நன்மையை வாரி வழங்குவர். கடந்த ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். போராட்ட நிலை மாறும். பொன்னும் பொருளும் சேரும். புகழும் பெருமையும் உண்டாகும். சித்திரை 1,2 ம் பாதங்களில் பிறந்தவருக்கு ஆண்டின் தொடக்கத்தில் சத்ரு ஜெய சனியால் செல்வாக்கு உயரும். அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். துணிச்சலுடன் செயல்படுவீர்கள். உடல் நிலை சீராகும். வழக்கில் வெற்றி கிடைக்கும். மார்ச் 6 முதல் கண்டச்சனியாக சஞ்சரித்தாலும், அஸ்தமனம், வக்கிரம், குருப்பார்வை என்பனவற்றால் சனியின் பாதிப்பு உங்களை நெருங்காது. 3,4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை பஞ்சம ஸ்தான சனியால் குடும்பத்தில் நெருக்கடி, உறவுடன் பகை, தம்பதி இடையே கருத்து வேறுபாடு, பிள்ளைகளால் சங்கடம் ஏற்படும். அதன்பின் வருமானத்திற்கு வழியமைப்பார். வியாபாரம், தொழிலில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், நவ.13 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் 1,2 ம் பாதத்தினருக்கு நவ.12 வரை ராகுவால் வெற்றி சேரும். நினைத்தது நிறைவேறும். நோய், வழக்கு பாதிப்பு இருக்காது. நவ. 13 முதல் லாப கேதுவால் வருமானம் உயரும். செல்வாக்கு கூடும். முடங்கிய தொழில் முன்னேற்றம் பெறும். 3,4 ம் பாதத்தில் பிறந்தவர்கள் நவ. 12 வரை பணப்புழக்கம் காண்பர். நெருக்கடி வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். நவ. 13 முதல் 4ம் இட ராகுவும், 10ம் இட கேதுவும் உழைப்பை அதிகரிப்பர். வேலை, தொழிலில் போராட்டமான நிலை உண்டாகும். 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்கள் ஆண்டின் முற்பகுதியில் கவனமாக செயல்படுவது அவசியம். வேலை, தொழிலில் நெருக்கடி உண்டாகும். மே 26 முதல் பணவரவு அதிகரிக்கும். தடைபட்ட வேலை நடந்தேறும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் என்ற கனவு நனவாகும். அக்.20 முதல் ஒரு பக்கம் செலவும், மறுபக்கம் சந்தோஷமும் இருக்கும். 3, 4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஆண்டின் முற்பகுதி யோகமாக இருக்கும். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவுகள் நனவாகும். மே 26 முதல் அனைத்திலும் எச்சரிக்கை அவசியம். அக். 20 முதல் மீண்டும் உங்கள் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். சித்திரை 1,2 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பிப்.13 – மார்ச் 14, ஜூன் 15 – ஆக. 17 காலங்களிலும், நவ. 17 – டிச. 15 காலத்திலும், 3,4 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன. 1 – ஜன. 14, மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், ஜூலை 17 – செப்.17, டிச.16 – 31 காலங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியன் முயற்சிகளை வெற்றியாக்குவார். முன்னேற்றம் தருவார். செல்வாக்குடன் வாழ வைப்பார். கேள்விக்குறியாக இருந்த நீங்கள் பிறர் ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வீர்கள். பணம், புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, ஆரோக்கியம் என அனைத்தும் கிடைக்கும். வேலை, தொழிலில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீண்ட நாள் கனவு நனவாகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய ஒப்பந்தம் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவோருக்கு அரசு வழியில் அனுமதி கிடைக்கும், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், கெமிக்கல், மெடிக்கல், உணவகம், விவசாயம், ரசாயனப் பொருட்கள், குடிநீர், பப்ளிகேஷன், ஷேர் மார்க்கெட், நிதி நிறுவனம், எக்ஸ்போர்ட், ஜவுளி, காலண்டர், நோட்டு புத்தகம் தயாரிப்பு, பள்ளிகள், யூடியூப், சின்னத்திரை, சினிமா தொழில்கள் முன்னேற்றம் அடையும், காவல் துறை, பாதுகாப்பு படை, மருத்துவத்துறையினர் லாபம் அடைவர். எதிர்பார்த்த இடமாற்றம், நியாயமாக வர வேண்டிய பதவி உயர்வும் கிடைக்காமல் அவதிக்கு ஆளான நிலை மாறும். தனியார் நிறுவன பணியாளர்களுக்கு எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். உடல் பாதிப்பு மறையும். குடும்பத்தில் மதிப்பு அதிகரிக்கும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என கனவு நனவாகும். வேலையில் ஏற்பட்ட நெருக்கடி மறையும். கணவருடன் இணக்கம் அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். சுய தொழில் ஆதாயம் தரும் பொழுது போக்கை விட்டு விட்டு படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். ஆசிரியர்கள் ஆலோசனையை பின்பற்றினால் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கும். உயர் கல்வி கனவு நனவாகும். சிலர் வெளி மாநிலம், வெளிநாட்டில் படிக்கச் செல்வர். தொற்று நோய், பரம்பரை நோய் என்று மருத்துவ மனைக்கு செல்லும் நிலை மாறும். உடல்நிலை சீராகும். மருத்துவச் செலவு குறையும். நீண்டநாள் கனவு நனவாகும். வீடு, மனை, வாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சேமிப்பு உயரும். தம்பதிக்குள் இருந்த கருத்து வேறுபாடு விலகும். வேண்டுதலை நிறைவேற்ற குடும்பத்தினருடன் கோயில்களுக்கு செல்வீர்கள். உறவினர் மத்தியில் கவுரவமாக வாழ்வீ்ரகள். பரிகாரம் : பைரவரை அஷ்டமியன்று வழிபட்டால் சிக்கல் தீரும்; நன்மை உண்டாகும். சுவாதி: சங்கடம் தீர்ப்பார் சனி அதிர்ஷ்டக்காரகன் சுக்கிரன், யோகக்காரகன் ராகு அம்சத்தில் பிறந்த உங்களுக்கு 2026 ம் ஆண்டு நெருக்கடியில் இருந்து விடுபடும் ஆண்டாக இருக்கும். அதிர்ஷ்டக்காற்று உங்களை நோக்கி வீசும். உங்கள் முயற்சி எல்லாம் வெற்றி பெறும். குடும்பத்திற்கு பாரமாக இருந்த நிலை மாறி குடும்பத்தை சுமப்பவராக மாறுவீர்கள். வேலை, வருமானம், அந்தஸ்து, செல்வாக்கு, சொத்து, சுகம் என நிறை வாழ்வு வாழ்வீர்கள். உங்களுக்கு சுகாதிபதியும், பஞ்சமாதிபதியுமான சனி, மார்ச் 6 வரை பஞ்சம ஸ்தானத்திலேயே ஆட்சியாக சஞ்சரிப்பதால் குடும்பத்தினரின் வெறுப்புக்கு ஆளாகும் நிலை, எந்த முயற்சியை மேற்கொண்டாலும் அதில் பின்னடைவு, உறவுகளுடன் பகை, காதலும் கசக்கும், கணவன், மனைவி உறவும் பகைக்கும், பிள்ளைகளால் சங்கடம் ஏற்படும். ஆனால் மார்ச் 6 முதல் சத்ரு ஜெய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி ஐந்தாண்டாக நீங்கள் அனுபவித்த சங்கடங்களில் இருந்து உங்களை விடுவிப்பார். முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். எந்த ஒன்றிலும் பிடிப்பில்லாமல் இருந்த உங்களுக்கு அதிகார வலிமை உண்டாகும். எதிர்ப்பை, போட்டியை, பகையை இருந்த இடம் தெரியாமல் செய்வார். உடல் பாதிப்பை போக்குவார். மன நிலையை சந்தோஷமாக்குவார். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரம், தொழிலில் லாபத்தை அதிகரிப்பார். நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், நவ.13 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் நவ.12 வரை வியாபாரம், தொழில் முன்னேற்றம் அடையும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். செல்வாக்கு உயரும். சங்கடம் வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தி உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நவ.13 முதல் சுக ஸ்தானத்தில் ராகுவும், ஜீவன ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சரிப்பதால் வேலைப்பளு அதிகரிக்கும். நேரத்திற்கு சாப்பிட முடியாத துாங்க முடியாத நிலை உண்டாகும். தாயாரின் உடல்நிலையில் எதிர்பாராத பாதிப்பு ஏற்படுவதுடன் தாய்வழி உறவுகளுடன் இடைவெளி உண்டாகும். வேலையில் பிரச்னை, தொழிலில் போராட்டம் என்ற நிலை ஏற்படும் என்பதால் சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக செல்வதால், மே 25 வரை உங்களுக்கு யோகமான காலமாக அமையும். பாக்ய குரு, செல்வம், செல்வாக்கு, அந்தஸ்து, பட்டம், பதவி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என கனவுகளை நனவாக்குவார். மே 26 முதல் ஜீவன ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் குரு வேலை, தொழிலில் அக்கறையை ஏற்படுத்துவார். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். சந்தோஷம், ஆரோக்கியத்தை அதிகரிப்பார். அக்.20 முதல் லாப குருவாக சஞ்சரிப்பவர் பொருளாதார நிலையை உயர்த்துவார். செல்வம், செல்வாக்கு, அந்தஸ்தை அதிகரிப்பார். ஜன. 1 – ஜன. 14, மார்ச். 15 – ஏப். 13 காலங்களிலும், ஜூலை. 17 – செப். 17, டிச. 16 – 31 காலங்களிலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் நான்கு மாத காலம் உங்களுக்கு யோகபலன் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளை வெற்றியாக்குவார். எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடுவோருக்கும், தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும். வசதி, வாய்ப்பு அதிகரிக்கும். இதுவரை நீங்கள் சிரமப்பட்ட காலம் முடிவுக்கு வரும். நீங்கள் எதிர்பார்த்து கிடைக்காத ஒவ்வொன்றும் இப்போது கிடைக்கும். இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வந்தது போல் நிலைமை மாறும். உங்களை ஏளனமாகப் பார்த்தவர்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்வீர்கள். பிறர் தயவை எதிர்பார்த்து வாழ்ந்தவர் கூட சொந்தக்காலில் நிற்கும் நிலை உருவாகும். படிப்பு, வேலை, திருமணம், தொழில் என எதிர்பார்ப்பு நிறைவேறும். தொழில் முன்னேற்றம் பெறும். கடந்த ஆண்டில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். ஐந்தாண்டுக்குப் பின் நீங்கள் எதிர்பார்த்த ஆதாயம் இப்போது கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவோருக்கு அரசு வழியில் அனுமதி கிடைக்கும், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வியாபாரம், ரசாயனம், ஓட்டல், திருமண மண்டபம், விடுதி, டிராவல் ஏஜன்சி, பில்டிங் டிசைனிங், டெக்கரேஷன், ஜவுளி, ஜூவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு, விற்பனை அனைத்திலும் ஆதாயம் கிடைக்கும். சினிமா, தொலைக்காட்சி, வலைதளம் மூலம் முன்னேற்றம் அடைவீர்கள். நீண்ட நாளாக அனுபவித்த நெருக்கடி, பிரச்னைகள் விலகும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். வேலை பார்க்கும் இடத்தில் செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மனக்குறை விலகும். சிலர் வேறு நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்வீர்கள். இந்த ஆண்டு முழுவதும் யோகமாக அமையும். படிப்பு, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம் என அவரவர் நிலைக்கேற்ற விருப்பம் நிறைவேறும். உடல் பாதிப்பு விலகும். சுய தொழில் செய்வோருக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வேலையில் இருந்த நெருக்கடி விலகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவரின் அன்பு அதிகரிக்கும். பொன், பொருள் சேரும். உறவுகள் மத்தியில் கவுரவமாக வாழும் நிலை உண்டாகும். படிப்பின் மீது அக்கறை அதிகரிக்கும். பொதுத் தேர்வு, போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும். உயர் கல்விக்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த கல்லுாரியில், விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். ஏப்ரல் மாதம் வரை படிப்பைத் தவிர வேறு சிந்தனைக்கு இடமளிக்காமல் ஆசிரியர்களின் ஆலோசனையை ஏற்பதால் மதிப்பெண் அதிகரிக்கும். நோய், மருத்துவச் செலவுகளால் அவதிப்பட்ட நிலை மாறும். அல்சர், நீரிழிவு, ரத்தக்கொதிப்பு கட்டுப்படும். பரம்பரை நோய், தொற்று நோயால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து வெளியில் வருவீர்கள். ஓய்வு, உறக்கம் என்பதில் சரியாக இருப்பவர்களுக்கு ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை. நினைத்தது நடக்கவில்லை என மனக்குறையோடு வாழ்பவர்களின் நிலையில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி உருவாகும். தம்பதிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய சொத்தும், நவீன பொருட்களும் சேரும். சுப நிகழ்ச்சி நடந்தேறும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். உறவினர் மத்தியில் செல்வாக்கு உயரும். பரிகாரம் : காளியை வழிபட மனக்குறை தீரும். நன்மை நடக்கும். விசாகம்: குறை தீர்ப்பார் குரு ஞானக்காரகனான குருவின் நட்சத்திரத்தில் நீங்கள் பிறந்திருந்தாலும், 1,2,3 ம் பாதங்களான துலாத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் ராசிநாதனாகவும், 4ம் பாதமான விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் ராசி நாதனாகவும் உள்ளனர். 2026 ம் ஆண்டு 1,2,3 ம் பாதங்களுக்கு மேன்மையான ஆண்டாக இருக்கும். கனவாக இருந்ததெல்லாம் நனவாகும். தடைபட்டு வேலைகள் நடந்தேறும். பொன்னும் பொருளும் சேரும். வழக்குகள் முடிவுக்கு வரும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு போராட்ட நிலை மாறும். பெரியோரின் உதவியும் தெய்வ அருளும் கிடைக்கும். மனதை வாட்டிய பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஆரோக்கியத்துடன் நிம்மதியாக வாழும் நிலை உண்டாகும். விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை குடும்பத்தில் நெருக்கடி நிலை இருக்கும். எடுக்கும் வேலைகளை முடிக்க முடியாமல் இழுபறியாகும். உறவுகளுடன் இணக்கம் இல்லாமல் போகும். கணவன், மனைவிக்கு இடையே கருத்துவேறுபாடு தோன்றும். பிள்ளைகளால் நெருக்கடி அதிகரிக்கும். மார்ச் 6 முதல் மீனத்தில் உள்ள சனி உங்கள் நிலையை உயர்த்துவார். செல்வாக்கு உயரும். எதிர்ப்பு, போட்டி, பகையை இருந்த இடம் தெரியாமல் செய்வார். வசதி வாய்ப்பு பெருகும். 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு மார்ச் 6 வரை அர்த்தாஷ்டமச் சனியாக சஞ்சரித்து நெருக்கடியை தந்தாலும், அதன்பின் மீன ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் அர்த்தாஷ்டமச்சனி உங்களை விட்டு விலகும். சனியின் பார்வையும் உங்கள் ராசியை விட்டு விலகுவதால் கடந்த இரண்டரை ஆண்டு காலம் நீங்கள் அடைந்த அவமானம், சங்கடம், மன உளைச்சல் மறையும். வருமானம் உயரும். பண நெருக்கடி நீங்கும். நவ.12 வரை ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும், நவ.13 முதல் ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிப்பதால் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு நவ. 12 வரை லாப கேதுவால் பணவரவு அதிகரிக்கும். அசையா சொத்து சேரும். அதிர்ஷ்ட வாய்ப்பு வரும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் வேலைகள் லாபமாகும். 4ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு நவ.13 முதல் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு கை விட்ட வேலைகளை முடித்து வைப்பார். முயற்சியை வெற்றியாக்குவார். தைரியம், தன்னம்பிக்கை கூடும். சூழ்நிலைகளால் மந்த நிலைக்கு ஆளானவரையும் சுறுசுறுப்பாக செயல்பட வைப்பார். மார்ச் 16 வரை மிதுனத்தில் வக்ரமாக சஞ்சரிக்கும் குரு, மார்ச் 17 முதல் வக்ர நிவர்த்தியாகிறார், தொடர்ந்து மே 26 முதல் கடகத்தில் உச்சமாக சஞ்சரிப்பவர், அக்.20 முதல் சிம்மத்திற்கு அதிசாரமாக சஞ்சரிப்பதால், 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு மே 25 வரை நினைப்பது நடந்தேறும். செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் என்ற கனவு நனவாகும். மே 26 முதல் வேலை, தொழிலில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஆனால் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். சந்தோஷம், ஆரோக்கியம் உண்டாகும். அக்.20 முதல் வரவேண்டிய பணம் வரும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம், தொழில் முன்னேற்றம் பெறும். விசாகம் 1,2,3 ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜன.1 – ஜன. 14, மார்ச் 15 – ஏப். 13 காலங்களிலும், ஜூலை. 17 – செப். 17, டிச. 16 – 31 காலங்களிலும், 4 ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஜன. 15 – பிப். 12, ஏப். 14 – மே 14 காலங்களிலும், ஆக. 18 – அக். 17 காலத்திலும் 3,6,10,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும் சூரியனால் நடக்காத வேலையும் நடக்கும். கிடைக்காத வாய்ப்பும் கிடைக்கும். உங்கள் நிலையை உயர வைப்பார். பட்டம், பதவி, பொன், பொருள், செல்வாக்கு காண வைப்பார். 2026 ம் ஆண்டில் உங்களின் திறமை வெளிப்படும். முயற்சி வெற்றி தரும். தடைப்பட்ட வேலை நடந்தேறும். உங்களுக்குரிய மரியாதை கிடைக்கும். படிப்பு, வேலை, திருமணம், தொழில் என எதிர்பார்ப்பு நிறைவேறும். பொன்னும் பொருளும் சேரும். சேமிப்பு உயரும். தொழில் காரகன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகும். புதிய தொழில் தொடங்க முயற்சிப்பவர்களுக்கு அதற்குரிய வழி பிறக்கும். எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கமிஷன் வியாபாரம், ரசாயனம், மருத்துவம், ஸ்பேர் பார்ட்ஸ் தயாரிப்பு விற்பனை, இன்ஜினியரிங், ரியல் எஸ்டேட், பில்டர்ஸ், விவசாயம், ஓட்டல், திருமண மண்டபம், விடுதி, டிராவல் ஏஜன்சி, பில்டிங் டிசைனிங், டெக்கரேஷன், ஜவுளி, ஜூவல்லரி, கால்நடை வளர்ப்பு, அழகு சாதனப்பொருட்கள் தயாரிப்பு, விற்பனை மூலம் லாபம் அதிகரிக்கும். வேலையின் மீதிருந்த பயம் போகும். உங்கள் திறமையை நிர்வாகம் தெரிந்து சலுகை, சம்பள உயர்வை வழங்கும். சிலருக்கு தற்போது உள்ள வேலையை விட நல்ல இடத்தில் எதிர்பார்த்த சம்பளத்துடன் வேலை கிடைக்கும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். பொன் பொருளை விற்று செலவுகளை சமாளித்து வந்த நிலை மாறும். ஆடை ஆபரணம், நவீன பொருட்கள் வாங்குவீர்கள். உடல் பாதிப்பு விலகும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்கள் ஏக்கம் தீரும். கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு டைவர்ஸ் வரை சென்றவர்களின் மனம் மாறும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வீர்கள். படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். பொதுத்தேர்வு, போட்டித் தேர்வில் அக்கறை அதிகரிக்கும். உங்களை வருத்திக் கொண்டு தேர்வில் கவனம் செலுத்துவீர்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை ஏற்பது நன்மை தரும். நோயால் அவதிப்பட்ட நிலை மாறும். பரம்பரை, தொற்று நோய்களுக்கு மாற்று சிகிச்சையில் ஈடுபடுவீர்கள். மருத்துவச்செலவு குறையும். உடல்நிலை மேம்படும். குடும்பத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். வீடு, மனை, வாகனம் வாங்கும் அளவிற்கு கையில் பணம் புரளும். பிள்ளைகளின் மேற்படிப்பு, திருமணம் என எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவுகள் மத்தியில் கவுரவம் உயரும். குடும்பத்தில் நிம்மதி பெருகும். பரிகாரம் : கோமதி அம்மனை வழிபட்டால் குறை தீரும். நன்மை நடக்கும்.
|