குரு, சுக்கிரன் ஆதரவு சிறப்பாக இருக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். செயலில் வெற்றி கிடைக்கும். புதனால் உங்களுக்கு ஏற்பட்ட அவப்பெயர்,செல்வாக்கு பாதிப்பு ,வீண் கவலை முதலியன மார்ச் 30 க்கு பிறகு மறையும். ஆனால் அதன் பிறகு அரசு வகையில் நன்மை காணப்படவில்லை. குடும்பத்தில் தேவையான வசதி அனைத்தும் கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும்.
தொழில், வியாபாரத்தில் வெளியூர் பயணத்தால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். மார்ச் 18,19,20ல் எதிர்பாராத வகையில் வருமானம் கிடைக்கும். மார்ச் 30க்கு பிறகு பகைவர் தொல்லை குறுக்கிடலாம். வியாபாரிகள் அரசின் சலுகை கிடைக்கப் பெறுவர். விரிவாக்கப்பணிக்காக வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.
பணியாளர்கள் உழைப்புக்கு ஏற்ப வருமானம் காண்பர். மார்ச் 30க்கு பிறகு அரசு பணியாளர்கள் வேலையில் பணிச்சுமையைச் சந்திக்க வாய்ப்புண்டு. விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.
கலைஞர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். பாராட்டு எதிர்பார்த்தபடி இருக்கும். ஏப்.1க்கு பிறகு அரசிடம் விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
அரசியல்வாதிகள் கடந்த கால உழைப்பின் பலனைப் பெறுவர்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். குருவால் நன்மை காணலாம்.
ஆசிரியர்களின் நன்மதிப்பைப் பெறுவர்.
விவசாயிகளுக்கு பொருளாதாரத்தில் எந்த குறையும் இருக்காது. கால்நடை வளர்ப்பின் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம் பெண்கள் சிறப்பான பலனைக் காணலாம். குடும்பத்தினரின் நன்மதிப்பு பெறுவர். விருந்து விழா என சென்று வருவீர்கள். ஏப். 8,9 ல் ஆடை, அணிகலன் வாங்கலாம். சூரியனால் கண் தொடர்பான பிரச்னை ஏற்படலாம். செவ்வாயால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் உருவாகலாம். வாகனப் பயணத்தின் போது கவனம் தேவை.
நல்ல நாள்: மார்ச் 18,19,20,21,22,28,29,30,31, ஏப்.1,4,5,8,9
கவன நாள்: மார்ச் 23,24 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 4,6
நிறம்: மஞ்சள் , வெள்ளை
பரிகாரம்: சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து காக்கைக்கு அன்னமிடுங்கள். விநாயகரை வழிபடுங்கள். காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள்.
மேலும்
வைகாசி ராசி பலன் (14.5.2024 முதல் 14.6.2024 வரை) »